துருக்கியின் முக்கியமான சமகால எழுத்தாளர்களில் ஒருவரும் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கான துருக்கி தூதராகத் தற்போது பணியாற்றிவருபவருமான ஃபிராத் சுனேலின் இரண்டாவது நாவல் இது.
ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, பின்லாந்து, லிதுவேனியா, எகிப்து, ஆர்மேனியா, துருக்கி, இந்தியா, வங்கதேசம், இந்தோனீஷியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் தற்காலச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு.
பல நூறு பக்கங்கள் கொண்ட நூல்களானாலும் ஏதோ ஒரு வரியே, ஒரு தருணமே திறப்பினைச் சாத்தியமாக்கும். பல சமயங்களில் சிறிய நூல் ஒன்று மிகப்பெரிய திறப்பினை வழங்கிவிடும். என் மனதில் எப்போதுமே சிறிய நூல்கள் நிகழ்த்தும் பெரிய திறப்புகள் குறித்த வியப்பு நிறைந்திருக்கிறது. ஈரடிக் குறள்கள் நிகழ்த்தும் திறப்புகள் போல, சில சிறிய நூல்கள் மூடுண்ட சிந்தனை வெளியில் திறப்புகளை நிகழ்த்தி வழமையான கருத்தாக்கக் கட்டமைப்புகளை நிர்நிர்மாணம் (deconstruction) செய்துவிடுகின்றன. ஒரு விநாடி மின்னல் நம்மைச் சுற்றியுள்ள வெளியை வெளிப்படுத்திக் காட்டுவது போன்றதுதான் அது. அந்த வகையில் எனக்கு மிக அரிய சிந்தனை அனுபவங்களை வழங்கிய சிறிய நூல்களைச் சிந்தித்துப் பார்ப்பேன். 'சிறிய நூல், அரிய நூல்' என்ற வகைமையில் சில நூல்களைக் குறித்து எழுதலாம் என்று நினைத்தேன். நான்கு சிந்தனைப் புலங்கள், ஒவ்வொன்றிலும் மூன்று சிறிய அரிய நூல்கள், மொத்தம் பன்னிரெண்டு நூல்கள் என்று திட்டமிட்டேன். தத்துவம், பொருளாதாரம், அரசியல், வரலாறு ஆகியவை அந்த துறைகள். இந்த நூல்கள், அவை வழங்கிய திறப்புகள் என் சிந்தனைப் பயண வரைபடத்தின் முக்கியப் புள்ளிகள். அந்தப் புள்ளிகளைத் தொகுத்துத் தருவது வாசகர்கள் அவரவர் சிந்தனைப் பயணத்தினூடாக பயன்தரக் காண்பார்கள் என்ற நோக்கில்தான்.
திரையிசையின் சுருக்கமான வரலாற்றில் தொடங்கி தனி இசை எப்படி திரையிசையுடன் பயணிக்கத் தொடங்கியது, சில ஆரம்பக்கால தனி இசைக்குழுக்கள், அவர்கள் உருவாக்கிய இசை போன்ற அம்சங்களை இந்நூல் விவரிக்கிறது. மேலும் தனி இசையின் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள், தனி இசை எதிர்க்கலாச்சாரமாக உருவெடுக்கும் போக்கு, இதன் முக்கியமான ஆளுமைகள், திரையிசையின் தற்போதைய நிலைமை, தனி இசை முறைசாராத் தொழிலாக இருக்கும் நிலை ஆகியவற்றையும் இந்நூல் ஆராய்கிறது. இறுதியாக, தனி இசையின் அழகியலைச் சொல்லி தனி இசை கேட்க உங்களை அழைத்துச் செல்ல விழைகிறது.
சமீபத்தில் வெளியான புத்தகங்கள்
₹130.00
₹200.00
செவ்வியல் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை தமிழில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான நூல்களின் வரிசை இது. காலத்தை வென்ற கிளாசிக்குகளை வாசகர்களிடம் எடுத்துச்செல்வதற்கான முயற்சி.
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி
ஜனவரி 2023 இல் சென்னையில் நடந்த சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட குறள் 100 மொழி 100 புத்தகம்தான். தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட தலைவர்களும் வெளிநாட்டுப் பார்வையாளர்களும் இதை ஆச்சரியத்தோடு பார்த்தனர். மேலும் விவரங்களுக்கு >>
இன்றும் என்றும் ஆழியின் நூல்களில் சிறந்த விற்பனையில் இருக்கும் நூல்கள். அச்சு நூலாகவோ மின்னூலாகவோ வாங்கலாம்.
₹199.00
நீங்கள் வளர்ந்துவரும் படைப்பாளியா? – உங்கள் புதியப் புத்தகங்களை ஆழி பதிப்பகம் மூலமாக வெளியிடுங்கள். அச்சு, மின் மற்றும் ஒலி வடிவில் உலகெங்கும் உங்கள் வாசகர்களைச் சென்றடையுங்கள்.
ஆழி பதிப்பகத்தின் அதிகாரபூர்வ யூ ட்யூப் சானல். நிகழ்வுகள், வெளியிடப்படும் நூல்கள் தொடர்பான உரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றைக் காணுங்கள்.