Description
தமிழ்த் திரையிசையின் செல்வாக்குக்கு ஆட்படாத தமிழர்கள் இருக்க முடியாது. திரையிசை என்ற ஆலமரத்தின் எதிரே தனி இசை (independent music) ஓர் எதிர்க்கலாச்சாரமாக வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய சூழலில் திரையிசை, தனி இசை, மாற்று இசை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு மெலிதாக உள்ளது. இதில் தூய்மைவாதம் எதுவுமில்லை; எனினும் தனி இசை வேறு தளம். திரையிசை மட்டும் தமிழ்நாட்டின் இசை இல்லை என்கிற நிலை மாறி, தனி இசையும் அதன் அங்கமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. இந்தப் பின்னணியில் தமிழ்த் தனி இசையின் தொடக்கம், எழுச்சி, அதன் இன்றைய போக்கு, எதிர்கால நிலை ஆகியவற்றை பற்றிய திறந்த உரையாடலுக்கான தேவை எழுகிறது. அந்த வகையில் காலத்தின் குழந்தையாக இந்நூல் உருவாகியிருக்கிறது.