Description
தளிக்கோட்டை முதல் டெல்லி வரையிலான நெடும் பயணத்திலும், அரசு பணியாளர் தொழில் முனைவோரான பரிணாம வளர்ச்சியிலும், கழகப் பணியில் கிளைக் கழகச் செயலளார் என்ற நிலையிலிருந்து கழகத்தின் பொருளாளர் என்று ஏற்றம் பெற்றதிலும் கடந்து வந்த சோதனைகள் பல, மிசா சிறைவாசம் போன்ற இடர்கள் பல. இருந்தும் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு இணங்க தமிழக மக்களின் நலன்காக்கவும், இன்னல்கள் களையவும் கிடைத்த நல்வாய்ப்புகள் பல. 191 நாடுகள் கலந்துகொண்டு டெல்லியில் 10 நாட்கள் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு மாநாட்டிற்கு பொறுப்பேற்று, மாநாட்டி இறுதியாக “நிலைநீடித்த வளர்ச்சிக்கான டெல்லி பிரகடனத்தை” அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பெரும் சாதனைகளுள் ஒன்று. மாநாட்டினைத் தொடர்ந்து பன்னாட்டு சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவராக ஓராண்டு செயல்பத்தது என இவ்விரண்டு அனுபவமுமே இந்த சுயசரிதை உருவான தூண்டுகோலாகும். தேர்தல் களங்களும், களப்பணியாற்றிய சக கழக உடன்பிறப்புகளும், அமைச்சராக செயல்பட்ட நாட்களும், இன்றைய முதல்வர் மு. க. ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களாக ஒரே ஆண்டில் பொறுப்பேற்று இன்று மு. க. ஸ்டாலின் கழகத் தலைவராகவும், டி.ஆர்.பி. கழக பொருளாளராக பொறுப்பிலிருப்பது என பல அனுபவங்களைத் திரட்டி உருவான ஒரு எளிய சுயசரிதை.